Thursday, March 29, 2012

Wednesday, June 8, 2011

அரசியல்வியாதி

ஆட்டோவில் இருந்து இறங்கி பங்களாவை நோக்கி நடந்தாள் கவிதா..

கவிதா 30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தாள், பார்பவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் வசீகர முகம் மற்றும் உடலமைப்பு...

ஏதோ ஒரு சோகம், அவள் முகத்தில் இழையோடியது

பங்களா வாசலில் வந்து, கறுப்பு கிரானைட்ல் தங்க நிற எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்த பெயர் பலகையை படித்தாள்.. "சாம்பவசிவம், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர்"
படித்துக்கொண்டே உள்ளே நுழைய முற்பட்டவளை , செக்க்யூரிட்டி குரல் தடுத்தது..

யாரும்மா நீ.. என்ன வேணும்..

சார், என் பேரு கவிதா, விதவைகள் மறுவாழ்வு நிதி சம்பந்தமா மனு கொடுத்தேன், அமைச்சர் ஐயா வந்து பார்க்க சொன்னாங்க.. இதோ கடிதம் என்று காண்பித்தாள்..

வாங்கி சரி பார்த்த செக்யூரிட்டி, சரி போய் அந்த பெஞ்சில உட்காருமா.. கூப்பிடுவாங்க..

அவளின் உடலை மேலிருந்து கீழ் கண்களால் அளந்த செக்யூரிட்டி, அமைச்சர் ஐயா காட்டுல இன்னைக்கு மழை தான்.. மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

கரை வேட்டிகள் வருவதும், போவதுமாக இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்து கொன்டிருந்த கவிதா, யாரும்மா கவிதா என்ற குரல் கேட்டு திரும்பினாள்..

வெள்ளை சட்டை பேண்ட் அனிந்த, படித்த தோற்றத்தில் இருந்த இளைஞன் தன்னை அமைச்சரின் உதவியாளர் ராஜன் என அறிமுகபடுத்திக்கொண்டான்..

உங்க கனவர் எப்போ இறந்தாரு?

6 மாசம் ஆகுதுங்க.. இன்னும் அரசு தர விதவைகள் உதவி பணம் வரலைங்க. அதான் ஐயாவ பார்த்து.. விசும்பினாள் கவிதா...

சரி சரி, அழாதே.. அதான் ஐயாவ பார்க்க வந்துட்டேல.. கிடைச்சுடும்,.. கவலை படாதே.. கொஞ்சம் ஐயாவ அனுசரிச்சு போனா.. எல்லாம் நல்லபடியா சீக்கிரம் நடக்கும்.. புரியுதா..சொல்லிக்கொண்டே நடந்தான் ராஜன்.. குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள் கவிதா..

அமைச்சரின் அறைக்குள் நுழைந்ததும் 'வணக்கம் ஐயா' என்றாள் பவ்யத்துடன்..

வணக்கம், உட்காரும்மா .. இருக்கையை காட்டினார் அமைச்சர்...அவளின் அங்கங்களை அனு அனுவாக ரசித்தன அவரின் கண்கள், கருப்பு கண்ணாடிக்கு பின்னாளிருந்து..

உன் மனுவை படிச்சேன்.. நிறைய சம்பிரதாயம் இருக்குமா .. அதெல்லாம் முடிச்சப்புறம் தான் உனக்கு பணம் வரும்.. நான் எல்லாம் பாத்துக்குறேன்.. மத்த விஷயங்களை என் பி. ஏ சொல்லுவார்.. கேட்டுக்கோமா.. சொல்லிவிட்டு.. ராஜனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார்.. ராஜனும் கண்களால் அவருக்கு சைகை செய்தான்..

சரிங்கய்யா.. ரொம்ப நன்றிங்கய்யா.. சொல்லிவிட்டு வெளியே வந்தாள்..

பின்னாலேயே ராஜனும் வந்தார்...

என்னம்மா ஐயா சொன்னத கேட்டியா ??.. எல்லாம் உன் கையில தான் இருக்கு.. அடுத்த சனிக்கிழமை சாயந்திரம் 7.00 மனிக்கு மதுரவாயல்ல இருக்க ஐயாவோட பன்னை வீட்டிற்கு வந்துடு.. ஐயா அங்கே இருப்பார்... ஒரு ரெண்டு மனி நேரம்..

திங்கட்கிழமை உனக்கு அரசாங்கம் தரும் விதவைக்கான உதவி பணம் வீடு தேடி வரும்.. அவள் கையில் பன்னை வீட்டு விலாசத்தை தினித்து அனுப்பி வைத்தார்.யோசிச்சு பாரு.. காலைல எனக்கு போன் போட்டு நல்ல சேதியா சொல்லு..

இரண்டு நாட்கள் மிகப்பெரிய மனப்போராட்டத்துக்கு பிறகு.. போன் எடுத்து, ராஜனின் என்னை அழுத்தி, ஒரே வார்த்தையில், சரி என்று சொல்லி, கட் செய்தாள்..

சனிக்கிழமை மாலை 3 மனி, அமைச்சர் பரபரப்பாக இருந்தார்..அவர் துறையில் நடந்த ஒரு ஊழல் பற்றி அக்கு வேறு ஆனிவேறாக ஒரு புலனாய்வு இதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.. அதன் அடிப்படையில், முதல்வர், அமைச்சரை வந்து பார்க்கும்படி கட்டளையிட்டிருந்தார்.. படபடப்புக்கு அதுவே காரனம்..

சந்தர்ப்பம் சரியில்லாததால், தயங்கி தயங்கி அவர் அருகில் வந்த ராஜன் , ஐயா, இன்னைக்கு 7 மனிக்கு பன்னை வீட்டுல கவிதா..... இழுத்தான்..

வேண்டாம் ராஜன், அதை கேன்சல் பன்னிடு, அந்த பொண்ணை நாளைக்கு வரச்சொல்லு.. சொல்லிவிட்டு படபடப்புடன் அவர் அறைக்கு சென்றுவிட்டார்..

இரவு 7 மனி, மதுரவாயல் பன்னை வீடு..

இதோ பாரு கவிதா.. அமைச்சர் ஐயா வர முடியாத சூழ்நிலை, நாளைக்கு வெச்சுக்கலாம், ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட நான் சொன்னா தான் எடுபடும். புரிஞ்சுக்கோ... வந்ததே வந்துட்டே.. எவ்வளவோ பேர தொட்டிருக்கேன்... ஆனா உன்னை மாதிரி... அம்சமான தேக்கு உடம்பு... எனக்கும் அடுத்த வாரம் கல்யாணம்.. கல்யாண நெருக்கத்துல ஒரு ட்ரியல் பார்த்த மாதிரியும் இருக்கும்.. என்ன சொல்றே ... கேட்டுக்கொண்டே அவள் தோள் மீது கைப்போட்டான்... சிறிது தயக்கத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் அவனுடன் அறைக்குள் சென்றாள் கவிதா...

சுமார் 2 மணி நேரம் கழித்து அவள் வெளியே தெருவில் நடந்தாள்...

தன் கைப்பையில் சினுங்கிய கைப்பேசிய எடுத்தாள்.. மறுமுனையில்

அமைச்சரின் குரல்..

என்ன சுதா எல்லாம் திட்டம் போட்டபடி நடந்ததா???

ஆமாம் சார், நீங்க சொன்ன மாதிரியே வந்தாரு.. பேசினாரு .. எல்லாம் முடிஞ்சது..

அதானே, அவன் சபல கேஸ்னு எனக்குத் தெரியுமே... சரி.. எதுவும் பாதுகாப்பு இல்லாமத்தானே நடந்தது...??

ஆமாம் சார்... எந்த பாதுகாப்பும் இல்ல..

குட்...சரிம்மா... நீ இனிமே அந்த தொழிலுக்கு போக வேண்டாம் .. HIV பாசிடிவ் பாதிக்கபட்டோருக்கான அரசு உதவி உனக்கு கிடைக்க ஏற்பாடு பன்னிடுறேன்... அது மட்டுமில்லாம.. .. பேசின மாதிரி 50,000 உன் வீடு தேடி வரும்..

சரிங்க சார். ரொம்ப நன்றி.

கைப்பேசி துண்டிக்கப்பட்டது..

இலவச சைக்கிள் திட்டத்துல, எனக்கு வர வேண்டிய கமிஷன் தொகை 35 லட்சத்தை மொத்தமா அடிச்சு உன் பெயர்ல போட்டுகிட்டா , உன்னை சும்மா விட்டுடுவானா இந்த சாம்பவசிவம்.. வெச்சேன் பாரு உனக்கும் , உன் சந்ததிக்கும் வேட்டு.. நான் அரசியல்வாதிடா.... சிரித்துக்கொண்டே 3 வது ரவுண்ட் ஸ்காட்ச் விஸ்கியை உள்ளே தள்ளினார் சமூக நலத்துறை அமைச்சர்..

ரீது டார்லிங், இப்போ தான் உன் பெயர்ல ஒரு அர்ச்சனை பன்னிட்டு கோயில்ல இருந்து வெளியே வரேன்டா...

எதையோ சாதித்த திருப்தியில், அடுத்த வாரம் தான் திருமணம் செய்ய இருக்கும் பெண் ரீதுவுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டே , பன்னை வீட்டை விட்டு வெளியே வந்தான் ராஜன்..

முறையற்ற உறவுகளை தவிர்ப்போம் - எய்ட்ஸை ஒழிப்போம்..
.பன்னை வீட்டின் எதிரே இருந்த டிஜிட்டல் பேனர் நியான் வெளிச்சத்தில் மின்னியது

Friday, June 3, 2011

நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று

நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று

ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.

..... ஹலோ விக்கி , நான் தான் அப்பா பேசுறேன்..

ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம்பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்ய முடியல.. டோன்ட் வொர்ரிபா

வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் "நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்கவும் முடியல,

என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.

முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லைபா..

அப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.

இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..

அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்
அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..

உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..

அண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு ப்ரோமோஷன் & 20% இன்கிரிமென்ட் வந்திருக்கு..

அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார்மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..

அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..

அண்ணா , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...

உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..

அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி, நானும் அண்ணாவும் நாளைக்கு ராம்நாட்ல இருப்போம்.. அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்பா ... ப்ளீஸ்பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..

தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.

போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..

மூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..

Monday, May 30, 2011

முதல் கஞ்சா வழக்கு..

திமுக வின் திருச்சி மாவட்ட துணை செயலாளரும், திருவரங்கம் கோவில் அறங்காவலருமான குடமுருட்டி சேகர் இன்று கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (31.05.2011) இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் தேர்தல்ல அம்மாக்கு எதிரா ரொம்ப ஆடியிருப்பாரோ??

கடந்த அதிமுக ஆட்சியில் செரீனா , வளர்ப்பு மகன் உள்ளிட்டோர் மீதும் , எதிர்த்து பேசியவர்கள் வீடுகளிலும், கார்களிலும் திடிரென்று கஞ்சா செடி முளைத்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 26, 2011

இப்படியும் ஒரு அமைச்சர்.. வெளங்கிடும் !



இன்றைய அம்மா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் ஆர்.பி.உதயகுமார்,அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல் செல்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இது ஏன் என்று கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அம்மாவே (ஜெயலலிதா) என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

உதயகுமார் மாதிரி நாமும் அம்மாவை தரிசிக்கும்போது செருப்பு இல்லாமல்தான் இருக்க வேண்டுமா என, மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்கின்றனர்.

தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இப்படி ஒரு அமைச்சர்.. விளங்கிடும் அந்த துறை..

வேலவன் கமெண்ட் - எல்லா எம்எல்ஏவும் இப்படியே மாறிட்டா . சட்டசபை வாசல்ல செருப்புக்கு டோக்கன் போடுற காண்ட்ராக்ட் எடுத்தா செம கலக்ஷன் பார்க்கலாம் போல இருக்கே !!!!

Thanks - Nakkhheeran.com

Wednesday, May 25, 2011

அழகர்சாமியின் குதிரை - வித்தியாசமான விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை.. ஒரு கவிதை.. பாஸ்கர் சக்தியின் கதை சுசீந்திரன் இயக்கத்தில் அருமையாக வந்துள்ளது. சமீபத்தில் வந்திருக்கும் படங்களில் மிக அருமையானது அ.குதிரை. எண்பதுகளின் பின்னணியில் ஒரு மெல்லிய கிராம கதை. அழகர்சாமியின் மலைக் கிராமமும் பின்னணியில் மலைகளும் கண்களுக்கு இதமோ இதம். அழகர்சாமியின் குதிரையின் வெற்றி இன்னும் பல எழுத்தாளர்களைத் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும் என்று நம்பிக்கை தருகிறது . அழகர்சாமியின் குதிரை மூலக்கதையிலிருந்து அங்கங்கே விலகியிருந்தாலும் அது துருத்திக் கொண்டிருக்காமல் இயல்பாய் இருப்பது படத்திற்கான அழகு. பாஸ்கர் சக்தி இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் இருப்பது படத்தின் மற்றொரு பலம் போல் தெரிகிறது. சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம்

பச்சை பசேல் பின்னணியில், கம்பீரமாக நிற்கின்ற வெள்ளை வெளேர் குதிரை , காக்கி சட்டையில் பரட்டை தலையுடன் ஒருவர்.. இருவருக்கும் மேலே வெள்ளை எழுத்தில் படத்தின் தலைப்பான "அழகர்சாமியின் குதிரை" அழகிய வடிவத்தில் மின்னுகிறது.. அதிலும் குதிரை என்ற வார்த்தை பார்க்கும் போதே ஒரு குதிரையை போலுள்ளது.. எழுத்துக்கள் இன்னும் ஒரு 45 டிகிரி சாய்மானத்தில் இருந்திருந்தால் மிக மிக அருமையாக இருந்திருக்கும்

அதே பச்சை பசேல் கிராம பின்னணியில் பரட்டை சுருள் முடியுடன் , வெள்ளை வேட்டி சட்டையில் , அழகான ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில்.. அருகில் குதிரையும் மாலையுடன்.. இவர்களுக்கு மேலே படத்தின் தலைப்பு.. இங்கே குதிரையை விட அந்த பெண்ணும் , பரட்டை தலையில் இருப்பவரும் தான் ஈர்ப்பு . குதிரைக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் இருந்திருக்கலாம்

என்னங்க ஒன்னும் புரியலையா? முதல் பத்தியானது (சிவப்பு நிறம் ) படம் பற்றி மற்ற தளங்களில் வந்த விமர்சனத்தின் தொகுப்பு.. !

இரண்டு மற்றும் மூன்றாம் பத்திகள் (பச்சை) இந்த படத்தினுடைய இரண்டு போஸ்டர்கள் பற்றிய விமர்சனம் ..

பின்ன படமே இன்னும் பார்க்காத, வெறும் ரெண்டு போஸ்டர் மட்டுமே பார்த்த ஒருத்தன் விமர்சனம் பண்ணா இப்படிதானே இருக்கும்.. ! ஆமாங்க இன்னும் படம் பார்க்கவே இல்லை. இதோ கிளம்பிகிட்டே இருக்கேன்.. 4 மணி காட்சிக்கு சத்யம்
காம்ப்ளெக்ஸ்ல.. குடும்பத்தோட.. ! ஆபிஸ்க்கு லீவ் போட்டு போறேன்..

பார்த்துட்டு வந்து வேறு வகைல வித்தியாசமா விமர்சனம் எழுதறேன்.. சரியா??.. வர்டா .. !

ம்ம்ம் மறந்துட்டேன்.. WWW.GOOGLE.COM ல search விண்டோல "அழகர்சாமி குதிரை - விமர்சனம்' நு கொடுத்து தேடு பட்டனை சொடுக்கினா.. நிறைய பக்கங்கள் வருதுங்க.. நான் பார்த்துட்டு வந்து எழுதற வரைக்கும் அதை எல்லாம் படிசிகிட்டு இருங்க .. ஓகே வா..
அவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் ! ")

அன்புடன்
வேலவன்

Tuesday, May 24, 2011

பதிவர் கிசு கிசு .. சுட சுட !



சூடான பதிவர் கிசிகிசு பத்து



கைரேகை, ஜாதக கட்டு ஸ்பெஷல் "சித்தூ" பதிவர் இப்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வாசலில் தினமும் ஆஜராகிறாராம் .. அம்மாவிற்கு நிச்சய வெற்றி என்று பலாபலன் பார்த்து தேர்தல் முடிவுக்கு முன்னரே பதிவு செய்த "முன்தேதியிட்ட" பதிவின் காப்பியை கையில் வைத்துக்கொண்டு அம்மாவின் கண்பார்வைக்காக காத்து நிற்கிறாராம்.. நல்லது நடக்கட்டும்.

தமிழுக்கு உண்மையாய் இருக்கும் பதிவருக்கும் , நல்ல நேரம் பார்த்து பதிவு எழுத ஆரம்பித்த பதிவருக்கும் கடும் போட்டி.. செய்திகளை சுட சுட தருவது யார் என்பதில்.. வாரம் இருமுறை தவறாது ஒரு பிரபல புலனாய்வு பத்திரிகை அலுவலகத்தில் நடுநிசியில் கழுகு போல் காத்திருந்து தேவையான செய்திகளை கொத்தி வந்து முதலில் பதிவது யார் என்பதில் தான் போட்டியே.. உண்மையானவர் இதில் முந்துகிறார்.. பிரிண்டிங் மிசின் ஓடும் போதே, அடியில் குனிந்து லென்ஸ் பார்வையால் செய்திகளை கவ்வி விடுகிறாராம்.. பத்திரிக்கை, கடைக்கு வருவதற்கு முன்பே இவர் பதிவில் செய்திகள் சுட சுட வந்துவிடுமோ என்று பத்திரிக்கை அலுவலகம் பரபரத்துக்கிடக்கிறது

அதிர்ஷ்ட பார்வை பதிவர் ஏக கடுப்பில் இருக்கிறார்.. மே 13 க்கு பிறகு எந்த பதிவு போட்டாலும் கூடி குமியடிக்க அனானிகள் குவிந்து விடுவதால் பதிவுகள் போடமுடியாமல் திணறுகிறார்.. பல முன்னணி பதிவர்களே அனானிகளாக கும்மியடிப்பதில் ஏகத்துக்கும் கிர்ர்ரடித்து கிடக்கிறார் .. சில நாட்களுக்கு அரசியல் சாயல் இல்லாமல் குலுக்குவார்பட்டி , மஸ்கூட்டா போன்ற பதிவுகளை மீள்பதிவு செய்யாலாமா என்று ஆழ்ந்த சிந்தனையில் உள்ளார்.

விருச்சிக ராசியில் பிறந்த காந்த பதிவர் பதிவை தற்காலிகமாக மூடிவிட்டு ஒதுங்கி இருக்கலாமா என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்.. தொட்டது துலங்காது போனது மட்டுமில்லாது, "கோ" வான "கிருஷ்ண" பதிவரும் , "R K நகர் பதிவரும் கண்டுபிடிச்சேன் , கண்டுபிடிச்சேன் நீ யாருன்னு நானும் கண்டுபிடிச்சேன் நு கோரஸாக பாடியதாலும், பல பஸ்சுகள் மாறி மாறி வந்து இடிப்பதாலும் இந்த முடிவாம் .. அநேககமாக அடுத்த தேர்தல் வரை மூடு விழா இருக்கும் என தெரிகிறது.

குதிரையில் வரும் பதிவர் எடுத்து வரும் சண்ட்விச்ல், நான் வெஜ் மட்டுமில்லாது வெஜ் சாண்ட்விச்சில் கூட இப்போதெல்லாம் நான் வெஜ் நெடி கலந்து மிக காரமாக இருப்பதால், அவரது பதிவுக்கு தடா போடலாமா என்று பிரபல பெண் பதிவர்கள் அனைவரும் கூடி கூடி பேசி வருகிறார்கள். மருத்துவ குணம் உள்ள செடி பதிவர் மற்றும் சமையல் குறிப்பு பதிவர் தான் இந்த கூட்டங்களுக்கு தலைமையாம்.

பறவைகள் சரணாலய பதிவர் சமீப காலமாக தன் பதிவுக்கு எக்கச்சக்கமாய் விழும் வாக்குகளை பார்த்து அசந்து போய் விட்டாராம்.. சரணாலயத்துக்கு போகும் வழியில் இருக்கும் பிரபல அம்மன் கோவில் தான் இதற்கு காரணம் என்று, ஏதாவது நேர்த்திக்கடன் செய்ய விரைவில் கோவிலுக்கு விசிட் அடிக்கும் மூடில் இருக்கிறாராம். துனைக்கு வரும்படி poem street பதிவரை அழைக்க , அவரோ, எனக்கும் அந்த மாதிரி ஓட்டு விழட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று இழுத்தடிக்கிறாராம் .

அரிசி மாவு , உளுந்து மாவு பலகார பதிவு கை மாறியதில் இருந்து பதிவுகள் கார சட்னியிலிருந்து தேங்காய் சட்னிக்கு மாறியது போல் சப்பென்றாகிவிட்டது.. இதில் அப்செட் ஆன வாடிக்கையாளர்கள் எங்கே மஞ்சள் கமென்ட் பச்சை கமெண்ட்டாக மாறிவிடுமோ என்றும் கலக்கத்தில் உள்ளதால் , வியாபாரம் படுத்துவிட்டது . மீண்டும் கைமாற்றிவிடலாமா என்ற சிந்தனை வரத்துவங்கியுள்ளதாம் இந்நாள் ஓனருக்கு.

கருப்பு சிவப்பு கட்சிக்கு சனிபெயர்ச்சி தொடங்கி இருப்பதை அடுத்து மணியான பதிவர், புதுக்கோட்டை மழை சாரல் பதிவர், ஜெய்ச்சவனுக்கு எதிர்பதமான "மணிவண்ணன்" ஸ்டைல் பதிவர், சொல்லில் குற்றம் கண்டுபிடிக்கும் ராமனின் எதிரி பதிவர், நாலாம் வகுப்பு பாஸ் பண்ண பதிவர், தினமணி பதிவர், freedom பதிவர், கடற்கரை மணலில் வேகமாக ஓடுவதை நோண்டும் பதிவர், அனுபவிச்சு ஜோசியம் பார்க்கும் பதிவர் உள்ளிட்ட பல பதிவர்கள் கலந்துக்கொள்ளும் மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு நடக்கிறதாம் .. இதற்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று ட்ரிப்பில் செவென் பதிவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாராம் , கொசுறு செய்தி - 1 . இந்த விழாவில் "1966 - சமீபத்திய " முதிய பதிவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது.. சமீபத்திய மனதை நிறைவடைய செய்த விஷயங்கள் அனைத்துக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயரே துணை என்று மகிழ்ந்து போய் இருக்கிறார் அந்த பதிவர்.
கொசுறு செய்தி 2 . உண்மையான தமிழுக்கு சொந்தக்கார பதிவர் ஒதுங்கியுள்ளராம்.. கலந்துக்கொள்ள மனம் நிறைய ஆசை தளும்பி வழிந்தாலும் , ஏற்கனவே பதிவர் சந்திப்பின் அனுபவங்கள் அவரை ஒதுங்கி இருக்க செய்கிறதாம்..



கொசுறு செய்தி 3 . மேலும் பல பதிவர்கள் இந்த விழாவில் கலந்துக்கொள்ள விரும்பி வீட்டில் இப்போதே பெரிய சைஸ் துண்டு , மற்றும் ஹெல்மெட் வாங்கி வைத்து இருக்கிறார்களாம்




மழைக்கடவுள் பதிவருக்கும் , கிங் பாண்ட் (KING POND) ல் இருந்து வந்து அனைவரையும் கலாஸும் பதிவருக்கும் யார் அதிக ஹிட் வாங்குவது என்பதில் கடும் போட்டியாம்.. இந்த நிமிட் வரை கிங் பாண்ட் சற்று முன்னிலையில் இருப்பதாக கேள்வி . போட்டியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு விடுவதால் இருவரின் சில சமிபத்திய பதிவுகளில் அதிக மைனஸ் ஓட்டு விழுவது வாடிக்கையாடிவிட்டது.. இருந்தும் மைனஸ் ஓட்டில் கூட பிரபலம் ஆகும் வாய்ப்பு இருப்பதால் அதையும் மகிழ்ச்சியாகவே இருவரும் ஏற்பதாக தெரிகிறது

அறுபடை வீட்டு கடவுளின் ஆயுதத்தை பெயரில் கொண்ட பதிவருக்கு பிரபல சினிமா கூத்தாடும் பத்திரிகையில் கிசு கிசு எழுதும் பகுதியில் வேலைகிடைக்கும் வாய்ப்பிருப்பதால் , அச்சாரமாக வலைப்பதிவர்கள் பற்றி இட்டுகட்டி கிசு கிசு எழுதி பயிற்சி பெரும் யோசைனையில் இருக்கிறார்.. இந்த பதிவை நீங்கள் படிக்கும் வேளையில் கூட அவர் பதிவு பப்ளிஷ் செய்யப்பட்டு , பலர் அவருக்கு டின் கட்டியிருக்கலாம் என்று தமிழ்மண பட்சி படபடக்கிறது ..

டிஸ்கி , முஸ்கி , பஸ்கி- யார் மனைத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல இது என்பதை படிக்கும் அனைவரும் புரிந்துக்கொள்வீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்..

மேலும் பல பதிவர் கிசு கிசு விரைவில்..

அன்புடன்
வேலவன்